ஈழத்தின் நாதஸ்வர சக்கரவர்த்தி கானமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலிகள்

ஈழத்து இசை உலகில் நாதஸ்தவரச் சக்கரவர்த்திகளில் ஒருவரான வி.கே.கானமூர்த்தி (வயது 60) நேற்று முன்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார்.

நாதஸ்வர உலகில் இரட்டையர்களான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் இவர் மூத்தவர்.கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியைச் சேர்ந்த இவர், 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடம் நாதஸ்வரக் கலையை முறைப்படி பயின்றார். அதன் பின்னர் இவர் மாவிட்டபுரம் இராசாவிடம் இக்கலையின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.

இளவயதிலேயே இசைக்கச்சோரிகளை நடத்திய இவர், பின்னர் தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து கச்சேரிகளை நடத்தினார்.

மிக நீண்டகாலமாக நாதஸ்வர உலகில் இரட்டையர்களாகப் பிரகாசித்த இவர்களின் கச்சேரி இடம்பெறாத கோவில்கள், பொது இடங்கள், நிகழ்ச்சிகளே இல்லை எனும் அளவிற்கு அகில இலங்கை முழுவதும் புகழ் பெற்றிந்தனர்.

ஈழத்தில் மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள தேசங்களுக்கு எல்லாம் சென்று இந்த இரட்டையர்கள் தங்கள் புகழ் பரப்பியதுடன் வெளிநாட்டவர்களாலும் போற்றப்பட்டனர்.

இந்த இரட்டையர்களின் தொடக்க காலத்தில் ஒருமுறை சென்னையில் இவர்களின் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியால் சென்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலக்சுமி தனது பயணத்தை இடையில் நிறுத்திவிட்டு இவர்களின் கச்சேரிக்குச் சென்று முழுமையாக இரசித்ததுடன் இருவரையும் பெரிதும் பாராட்டியிருந்தார்.இந்த இரட்டையர்களுக்கு யாழ். குடாநாட்டில் பெரும் இரசிகர் கூட்டமே இருந்தது. இவர்களின் கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு பெரும் கூட்டம் சேர்ந்து விடுமளவுக்கு அனைவரையும் இவர்கள் தங்கள் இசைப்புலமையால் கட்டிப் போட்டிருந்தனர்.

கர்நாடக இசையில் மட்டுமல்லாது அதனூடாக இவர்கள் மெல்லிசையிலும் புகழ் பெற்றிருந்தனர்.2005 ஆம் ஆண்டில் இந்த இரட்டையர்களுக்கு சிறிலங்கா அரசு கலாபூசணம் விருது வழங்கி கெளரவித்தது.கோவில்கள், பொது அமைப்புக்கள், இசைச்சங்கங்களால் பல கெளரவ விருதுகளையும் பட்டங்களையும் இவர்கள் பெற்றிருந்தனர்.

நாட்டுச் சூழ்நிலையால் இசை விற்பன்னர்கள் சற்று நலிவுற்றிருந்த போதும் தனது பிறந்த மண்ணில் தோடர்ந்து கலைப்பணியாற்றி வந்த நிலையில் கானமூர்த்தி நேற்று முன்நாள் காலமானார்.இவருக்கு மூன்று ஆண் 

பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்

நன்றி தினக்குரல்

யாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்

அன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன்
ஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம் பெற்றது.

காலையில் அன்னையின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்ற தெல்லிப்பளை கட்டுப்பெட்டி மாயானத்தில் நிர்மானிக்கப்பட்ட வைரவர் ஆலயம் திறக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பகல் 9.00 மணிக்கு அன்னையின் பூர்வீக இல்லத்தில் இருந்து திருவுருவப்படம் ஊர்வலமாக யாத்திரிகர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. திருவுருவப் படத்திற்க்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் முன்னர் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து யாத்திரிகர் விடுதியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பாமாச்சாரிய சுவாமிகள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குரு துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு அகிலேஸ்வரக் குருக்கள் சர்வதேச இந்துமதக் குரு பீடாதிபதியின் தலைவர் மகேஸ்வரக்குருக்கள், மருதனார்மடம் ஆஞ்ச நேயர் அலுய பிரதம குரு சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்கள்.

தலைமையுரையைத் தொடர்ந்து அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் அன்னையின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட இந்து ஒலி நூலை பாரிபாலன சபைத் தலைவர் தவநாதன் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து அம்மையாரின் பொன்மொழிகள் அடங்கிய நூலை உப தலைவர் அருளானந்தம் வெளியிட்டு வைத்தார்

மற்றும் அன்னையினால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி உரைகளும் கவிதைகளும் இடம் பெற்றதுடன் பிரார்த்தனையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் நீதியாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரியாகள் அதிபர்கள் மாணவர்கள் அரச ஊழியர்கள் பொது மக்கள் மாணவர்கள் என சுமார் ஜயாயித்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.


தகவல் மற்றும் புகைப்படங்கள் : பதிவு இணையத்தளம்

புதிய மலையகம்

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று நிர்ஷன் அவர்களின் புதிய மலையகம் வலைப்பூ வெளிவந்துள்ளது

பகீயின் ஊரோடி


இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று பகீயின் ஊரோடி வலைப்பூ வெளிவந்துள்ளது

சிவத்தமிழ்ச்செல்விக்கு அகவை 83


சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 83வது பிறந்ததின நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றது அதன்போது திரு ஆறுதிருமுருகன் ,யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு சண்முகலிங்கம், வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றுவதை படத்தில் காணலாம்.

மேலும் சில தகவல்கள் . .

யாழ் மண்ணின் புனிதத்தை மேம்படுத்தும் புண்ணிய வழியில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருமை தெய்வத்திருமகள் தங்கம்மா அப்பாக்குட்டியையே சாரும். சொற்பொழிவுப் பணிமூலம் சமய பிரசாரத் தொண்டாகத் தனது சேவை வரலாற்றை ஆரம்பித்த சிவத்தமிழ்ச்செல்வி சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி இந்நாட்டில் மட்டுமல்ல பாரெல்லம் வாழும் இந்து மக்கள் போற்றிப் பாராட்டும் வகையில் ஆலயப் பணியுடன் மக்கள் சேவையை ஆற்றி வருகிறார்.
* அமெரிக்கா ஹாவாய் ஷ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை அம்மையாருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
* கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி தெய்வத் திருமகளைப் போற்றி நின்றது யாழ் பல்கலைக்கழகம்.
* அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை மாதத்தில் யாழ் மண்ணில் பொன் விழாவையொட்டி இந்து மாநாடு நடத்தியபோது அன்னைக்கு "தெய்வத் திருமகள்" என்ற பட்டம் வழங்கி மாமன்றம் பெருமை தேடிக் கொண்டது

நன்றி :- வீரகேசரி , தினக்குரல்

பத்திரிகையில் ஆரவாரம்

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று தாசன் அண்ணாவின் ஆரவாரம் வலைப்பூ வெளிவந்துள்ளது

கானாபிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி

இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் ஓர் திருப்புமுனையாக தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று தாயகக்கனவுகளுடன் படைப்புக்களைப்படைத்துவரும் கானாபிரபா அண்ணாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பூ இன்று பத்திரிகையில் வெளிவந்துள்ளது

[ படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகத்தெரியும் ]

வந்தியதேவனின் உளறல்கள்

THAAYAKKALAIGNARKAL இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று வந்தியதேவனின் உளறல்கள் வெளிவந்துள்ளது . இனிமேல் பத்திரிகையில் வலைப்பதிவர்கள் பற்றி வெளிவரும் ஆக்கங்கள் யாவும் கலைஞர்கள் தளத்தில் இடம்பிடிக்கும் ஏனென்றால் ஆக்கங்களைப்படைப்பதால் வலைப்பதிவர்களும் கலைஞர்கள் தானே ?

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்

இலங்கைக்கலைஞர் மதியின் கைவண்ணத்தில் வந்த "யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்" என்ற பாடலின் பாடல்வரிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன் இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் எங்கும் பரவவேண்டும் என்று இவ்வேளை இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
பாடலைக்கேட்டுக்கொண்டே மீதியைப்படியுங்கள்

Get this widget Track details

யாழ் நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்

நல்லூர்க்கந்தன் வீதியில் நாம் கம்பன்கழகம் பார்த்ததும்
ராஜாத்தியட்டர் அரங்கிலே களவாய் சினிமா பார்த்ததும்
லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளில் சுற்றியது என்நெஞ்சில் சுற்றுதடா (2)

சட்டநாதர் கோயிலில் அருணா கோஷ்டி பார்ப்பதும்
இளங்கலைஞர் மன்றத்தில் அரங்கேற்றம் பார்த்ததும்
சின்னமணி வில்லிசை சின்னவயசில் பார்த்ததும்
மாவிட்டபுரம் கோயிலில் மாவிளக்கு போட்டதும்

கீரிமலைக்கடலிலே நீச்சல் பழகப்போனதும்
கச்சான் கடை ஆச்சியோடு சண்டைபிடித்து ஓடியதும் (2)
தட்டிவானில் ஏறி சந்நிதி கோயில் போனதும்
அன்னதான மண்டபத்தில் வரிசையாக நின்றதும்

பன்றித்தலைச்சி அம்மன் கேயில் பங்குனித்திங்கள் பொங்கலும்
வல்லிபுரக்கோயிலின் நாமம் அள்ளிப்பூசியதும்
நாகர்கோவில் மண்ல்காடு சவுக்கங்காட்டுத்தோப்பெல்லாம்
கப்பல் திருவிழா பார்த்தது என் நெஞ்சில் நிக்குதடா (2)

துர்க்கைஅம்மன் கோயிலில் பிரதட்டை அடித்ததும்
மாரிஅம்மன் கோயிலில் தீவெட்டி பிடித்தததும்
சுட்டிபுரம் அம்மன் கோயில் சீர்காழி கச்சேரியும்
நயினை அம்மன் கோயிலுக்கு வள்ளத்தில் போனதும்

விக்னா டியூஷன் போனதும் Science Hall இல் படித்ததும்
நேற்றுப்போல தெரியுது இது வாழ்வில் மறக்குமா (2)
பள்ளிக்கூடம் போகாமல் Big Match பார்க்கப்போனதும்
வாத்தியாரைக்கண்டதும் கூட்டத்திலே மறைந்ததும் (2)

யாழ்நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர்க்கந்தன் வீதியில் நாம் கம்பன்கழகம் பார்த்ததும்
கைலாசபதி கலையரங்கில Colors Night பார்த்ததும்

லேடிஸ் கோலிஜ் சுண்டிக்குளி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என்நெஞ்சில் சுற்றுதடா (2)

யாழ்நகரவீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லைவெளி நாம் சென்று . . . . . .
காற்று வாங்கிய நேரங்கள் . . . . . .


இந்தப்பாடலை புலம்பெயர்தமிழர்கள் அனைவரையும் சென்றடையவேண்டுமென்பதே எனது நோக்கம் எனவே இப்பாடலைக்கேட்கும் நீங்கள் உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ தெரிவியுங்கள்

நன்றி

பாடலைப்பெற உதவிய நண்பர் ஜேயாவுக்கும் நன்றிகள்